COYLE மற்றும் JETRO அமைப்புக்கள் இணைந்து 2025

COYLE மற்றும் JETRO அமைப்புக்கள் இணைந்து 2025

ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பெருநிறுவன ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் விருதுகளை அறிமுகப்படுத்துகின்றன.

இலங்கை தொழில்முனைவோர் சபை (CO) மற்றும் ஜப்பான் வெளிவாரி வர்த்தக அமைப்புடன் JETRO) இணைந்து, ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொழும்பு ஷங்கரி லாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் நிகழ்வில் இலங்கை பெருநிறுவன ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் விருதுகள் (LCPA) 2025 உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது.

தற்போது தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SUCHPA ஊழியர் நல்வாழ்வு, பணியிட நிலைத்தன்மை மற்றும் உற்பத்தித்திறனை சிறப்பாக மேம்படுத்தும் இலங்கை வணிகங்களை அங்கீகரிக்கிறது. JETRO அமைப்பு பிரதான அமைப்பாக இணைவதனால், உயரிய சர்வதேச தரப்படுத்தல், நிபுணத்துவம் மற்றும் உலகளாவிய நடைமுறைகளை இந்த திட்டத்திற்குள் உள்ளடக்குவதால் இந்த ஆண்டு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.

அங்கூரார்ப்பண விழாவில் உரையாற்றிய COYLE தலைவர் திரு மஞ்சுள விஜேகந்தா, பெருநிறுவன ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறன் விருதுகள் வெறும் அங்கீகாரத் திட்டம் என்பதை விட இது பிற நிறுவனங்களையும் சிறந்த பணியிட ஆரோக்கியம் மற்றும் முழுமையான உற்பத்தித்திறனை நோக்கி எத்தனிப்புடன் செயற்படுவதற்கு ஊக்குவிக்கும் ஒரு அமைப்பாகும் நீங்கள் ஒரு சமநிலையான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தால், அது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்’ என்று கூறினார்.

நிறுவனங்கள் தங்கள் அபிவிருத்தி உத்திகளின் பிரதானிகளாக மக்களை வைப்பதை உறுதி செய்வதோடு, இலங்கையில் சிறந்த வேலைவாய்ப்பு சூழலை வளர்ப்பதற்கான COYLE இன் பரந்த நோக்கத்தையும் இந்த விருதுகள் நேரடியாக ஆதரிக்கின்றன.

இந்த ஆண்டிற்கான முதன்மை அனுசரணையாளரான சம்பத் வங்கி, தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை ஆதரிப்பதில் தனது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டியது. மேலும் ஒரு சிறந்த பொருளாதாரத்தின் அடிப்படையாக சீரிய பணியாளர்களை உருவாக்குவதில் மெம்மேலும் முதலீடு செய்வதற்கான தனது நோக்கத்தையும் சுட்டிக் காட்டியது ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் முன்னணியில் இயங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்க COVE உடன் இணைந்து செயற்படுவதில் வங்கி தனது பெருமையை வெளிப்படுத்திய

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு மீற்றிரு பெரேரா மேலும் கூறுகையில் பெருநிறுவனத் தலைவர்களே முன்னேறிச் சென்று வழி காட்டுங்கள் உங்கள் தர அடையாளங்கள் நீங்கள் தயாரிக்கும் அல்லது விற்கும் பொருட்களுக்காக மட்டுமல்லாமல், நீங்கள் உங்கள் தொழிலாளர்களை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதற்காகவும் அங்கீகரிக்கப்பட்ட்டும் உங்கள் செயல்கள் இதனை வெகுதூரம் கொண்டு செல்ல முடியும், நாடாவிய ரீதியில் உள்ள வணிகங்களின் நல்வாழ்வை முதன்மைப்படுத்தவும், ஒன்றாக, ஆரோக்கியமான, அதிக உற்பத்தித் திறன் கொண்ட நாட்டை வடிவமைக்கவும் இது ஊக்கமளிக்கும்

Aவில் பங்கேற்பது. முதலாளிகளின் தரப்படுத்தல் மற்றும் பணியாளர் ஈடுபாட்டை அதிகரிப்பது முதல் நிலையான பணியாளர் மேலாண்மையில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவது வரை நிறுவனத்திற்கு திடமான நன்மைகளை வழங்குகிறது. இதன் வெற்றியாளர்கள் தேசிய அங்கீகாரத்தையும் சுகாதாரம் மற்றும் உற்பத்தித்திறனை சிறப்பாக எடுத்துக் காட்டும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்

2023 விருதுகளுக்கான விண்ணப்பங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. சிறந்த பணியிடங்களை உருவாக்குவதில் தங்கள் முயற்சிகளை வெளிப்படுத்தவும் நிறுவனத் தலைவர்கள், மனிதவளத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுக்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்

விண்ணப்பப் படிவங்களை என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யமுடியும் ஒக்டோபர் 31 2025 ஆம் திகதியுடன் விண்ணப்ப சமர்ப்பிப்புகள் முடிவடையும்

SUCHPA 2025 என்பது ஒவ்வொரு இலங்கை நிறுவனமும் ஆரோக்கியமான ஊழியர்கள், வலுவான பணியிடங்கள் மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட நாட்டை கட்டியெழுப்புவதற்காக விடப்படும் ஒரு அழைப்பாணை ஆகும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )